யுக்ரைய்னில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக க்ரைமியா பிராந்தியத்திலுள்ள 93 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
ஏன்றுமில்லாத வகையில் இந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் மக்கள் அதிகளவில் பங்கேற்றிருந்ததாக க்ரைமியா பிராந்திய தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் யுக்ரைய்னின் பல எதிர்கட்சிகள் இந்த கருத்தறியும் வாக்கெடுப்பை நிராகரித்துள்ளன.
ரஷ்யாவிற்கு ஆதரவான ஜனாதிபதி விக்டர் யனூகோவிச் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் க்ரைமியா பிராந்தியத்தை ரஷ்ய ஆதரவுப் படையினர் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.
க்ரைமியா பிராந்தியத்தில் 58 தசம் 5 வீதமானவர்கள் ரஷ்ய மொழிபேசுவோர் என்பதுடன், அவர்களில் பலர் க்ரைமியா பிராந்தியம் மீண்டும் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
1 தசம் 5 மில்லியன் மக்கள் இந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.
இந்த வாக்கெடுப்பு நியாயமாக நடைபெற்றதாக ரஷ்ய படையினர் க்ரைமியா பிராந்தியத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர், பிராந்திய அரசாங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட செர்ஜிஸ் அஸ்சேனோவ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை க்ரைமியாவிற்கு வெளியே டொடென்ட்ஸ் நகரிலுள்ள அரச தரப்பு சட்டத்தரணி அலுவலகத்தை ரஷ்யாவிற்கு ஆதரவான ஆர்பாட்டகாரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
டோடென்ட்ஸ் ரஷ்யாவின் நகரம் எனவும் அவர்கள் கோஷமிட்டுள்ளனர்